News October 14, 2025
வேலூர்: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை தெங்கால் பகுதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரியான விநாயகம் (54) என்பவர் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மூதாட்டி நேற்று பொன்னை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விநாயகத்தை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 14, 2025
வேலூர்: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

வேலூர் மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 14, 2025
வேலூர்: குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை!

வேலூர், மேல்பாடி தேன்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பரத் (28), கார் டிரைவர். இவருக்கும், இவரது மனைவி மகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மன வேதனை அடைந்த மகேஸ்வரி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மேல்பாடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 14, 2025
வேலூர்: ரயில்வேயில் சூப்பர் வேலை, இன்றே கடைசி!

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <