News October 14, 2025
வேலூரில் இன்று கரண்ட் கட்?

வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த சாத்துமதுரை, கீழ் பள்ளிப்பட்டு ஆகிய துணை மின் நிலைங்களில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (அக் .14) மேற்கொள்ளப்பட்ட இருந்தது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களுக்காக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக வேலூர் கோட்ட செயற்பொறியாளர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
வேலூர்: குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை!

வேலூர், மேல்பாடி தேன்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பரத் (28), கார் டிரைவர். இவருக்கும், இவரது மனைவி மகேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டதால் மன வேதனை அடைந்த மகேஸ்வரி, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மேல்பாடி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 14, 2025
வேலூர்: ரயில்வேயில் சூப்பர் வேலை, இன்றே கடைசி!

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <
News October 14, 2025
வேலூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.