News October 14, 2025
மதுரையில் அக்.22 முதல் கோலாகலம்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. திருவிழா வேல் வாங்கும் நிகழ்ச்சி அக். 26 மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணிக்குள் கோயில் கம்பத்தடி மண்டபத்தில் நடக்கும். சூரசம்ஹார லீலை அக். 27ல் நடைபெறும்
அக். 28-ல் காலையில் கிரி வீதி, ரத வீதிகளில் சிறிய வைரத் தேரோட்டம், மாலை 4:00 மணிக்கு நடைபெறும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News October 14, 2025
மதுரையில் வீட்டிற்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

மதுரை கீழவெளிவீதி சாயப்பட்டறை கூலித் தொழிலாளி பழனி 60 வண்டியூர் பகுதியில் வசித்து வந்தார். சில நாட்களாக அவர் வேலைக்கு வராததால் சாயப்பட்டறை தொழிலாளர்கள் நேற்று அவர் வீட்டிற்கு சென்றனர். வீட்டிற்குள் துர்நாற்றம் வீசியதால் வண்டியூர் விஏஓவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது புகாரின் பேரில் போலீசார் வீட்டின் கதையை உடைத்து பார்த்த போது பழனி அழுகிய நிலையில் இறந்து கிடந்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 14, 2025
மதுரை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

மதுரை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<
News October 14, 2025
திருப்பரங்குன்றத்தில் தங்கரத புறப்பாடு ரத்து

திருப்பரங்குன்றத்தில் நடைபெற இருக்கும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குள் தங்கி விரதம் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் திணை மாவு, எலுமிச்சை சாறு, பால் ஆகியவை வழங்கப்படும். மேலும் பக்தர்கள் கோயிலுக்குள் தங்கியிருப்பதால் அக்டோபர் 22 முதல் 28 வரை கோவிலில் தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்பட்டும் என திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.