News October 14, 2025

முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

முல்லைப் பெரியாறு அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக திரிசூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் கிடைக்க பெற்றுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதும் காவல்துறையினருடன், வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் இணைந்து நேற்று (அக்.13) அணை பகுதி முழுவதும் சோதனை நடத்தினர். பின்னர் மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது. இடுக்கி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 14, 2025

தேனி: மது போதையால் ஒருவர் பரிதாப பலி

image

கேரளா, இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் பீட்டர் (51). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கம்பம் வந்த நிலை அங்கு மது குடித்துள்ளார். கம்பம் பகுதியில் மது போதையில் நடந்து சென்றவர் தவறி சாக்கடையில் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்து நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனில் உயிரிழந்தார். இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு (அக்.13) பதிவு செய்து விசாரணை

News October 14, 2025

தேனி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

தேனி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.i<<>>n என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

News October 14, 2025

தேனி அருகே கத்தியை காட்டி வழிப்பறி

image

தேவாரம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் நேற்று (அக்.13) தேவாரம் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது இவரை பிரசாத் என்பவர் வழிமறித்து குடிப்பதற்கு பணம் கொடுக்குமாறு கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். சுதாரித்துக் கொண்ட மணி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பிரசாத்தை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது செய்தனர்.

error: Content is protected !!