News October 14, 2025
41 குடும்பத்திற்கும் மாதம் ₹5,000.. தவெக சார்பில் அறிவிப்பு

கரூர் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 41 குடும்பத்தினருக்கும் தவெக சார்பில் மாதந்தோறும் ₹5,000 வழங்கப்படும் என ஜேப்பியார் கல்வி நிறுவன தலைவர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும், பலியானோரின் வாரிசுகளின் படிப்புகளுக்கு ஆகும் செலவுகளையும் ஜேப்பியார் கல்வி நிறுவனம் ஏற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தவெக சார்பில் தலா ₹20 லட்சம் வழங்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார்.
Similar News
News October 14, 2025
PAN Card-ல் இதை கவனியுங்க… இல்லனா ₹10 ஆயிரம் அபராதம்!

செயல்பாட்டில் இல்லாத பான் கார்டை உபயோகப்படுத்தினாலோ, ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டாலோ, ₹10,000 அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பான் கார்டு ஆக்டிவாக இருக்கிறதா என்பதை அறிய ◆e-Filing தளத்தில், Quick Links-ஐ கிளிக் பண்ணுங்க ◆Verify Your PAN-ஐ கிளிக் செய்து, பான் எண் & தனிநபர் தகவலை கொடுத்து, சரிபார்க்கவும். மேலும், வரும் டிச. 31-க்குள் ஆதாருடன் பான் கார்டை இணையுங்கள்.
News October 14, 2025
BREAKING: திமுக அமைச்சருடன் இபிஎஸ் சந்திப்பு

சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து இபிஎஸ், உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கடந்த மாதம் திடீரென மயங்கி விழுந்த துரைமுருகன், கையில் காயம் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் அரசியல் களத்தில் இரு கட்சிகளும் எதிர் துருவங்களாக பயணம் செய்தாலும், திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகனை, EPS சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தது ஆரோக்கியமான அரசியலாக பார்க்கப்படுகிறது.
News October 14, 2025
எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு 7 மணி அளவில் ஜம்மு காஷ்மீர், மச்சில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஊடுருவலை முறியடித்தனர். பனிப்பொழிவை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.