News October 14, 2025

இந்தியாவின் பசுமையான ரயில் நிலையங்கள்

image

சுற்றுச்சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தாமல், நவீன தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் ரயில் நிலையங்கள் பசுமையான ரயில் நிலையங்களாக அறியப்படுகின்றன. சோலார் பேனல்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, மழைநீர் சேகரிப்பு, சூழலுக்கு உகந்த கட்டுமான பொருள்களைக் கொண்டு இவை அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள பசுமையான ரயில் நிலையங்களை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Similar News

News October 14, 2025

எல்லையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

image

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நேற்றிரவு 7 மணி அளவில் ஜம்மு காஷ்மீர், மச்சில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி ஊடுருவலை முறியடித்தனர். பனிப்பொழிவை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News October 14, 2025

பினராயி மகன் மீது நடவடிக்கை எடுக்க காங்., கடிதம்

image

பண முறைகேடு வழக்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகன் விவேக் கிரண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ED-க்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. 2023-ல் விவேக் கிரண் மீது பண மோசடி தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ஆனால், இதுதொடர்பான விசாரணைக்கு அவர் இதுவரை ஆஜராகவில்லை. இந்நிலையில், வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்று காங்., கோரிக்கை விடுத்துள்ளது.

News October 14, 2025

பாமக ஒற்றுமைக்கு GK மணி அழைப்பு!

image

பாமகவின் பேரவை குழு தலைவராக தாமே தொடர்வதாக GK மணி தெரிவித்துள்ளார். சபாநாயகரை சந்தித்த பிறகு பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவுக்கு வந்துள்ள சோதனை, வேதனை அளிப்பதாக கூறினார். பாமக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்த அவர், இல்லை எனில் அனைவருக்கும் தாழ்வு என்றார். முன்னதாக, குழு தலைவர் பொறுப்பிலிருந்து GK மணியை நீக்கக்கோரி அன்புமணி ஆதரவு MLA-க்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!