News October 14, 2025
ஆஞ்சநேயர் கோவிலில் வெடி குண்டு மிரட்டல்!

நாமக்கல் மாவட்ட ஆஞ்சநேயர் கோவிலில் மெயில் மூலம் வெடி குண்டு மிரட்டல் என தகவல் வந்ததின் பேரில் நேற்று (அக்.13) மாலை 6.30 மணிக்கு BBDS SSI அருணாச்சலம், SSI கோபி, BBDS Dog டயானா, HC வேல்முருகன், HC சௌந்தர்ராஜன், HC ரமேஷ் ஆகியோர் ஆஞ்சநேயர் கோவில் முழுவதும் சோதனை செய்தனர். இதனால் ஆஞ்சநேயர் கோவிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News October 14, 2025
நாமக்கல்: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமை நடக்–கிறது. அதன்படி இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற அக்.17-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு தனியார் துறையினர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 04286-222260 தொடர்பு கொள்ளலாம்.
News October 13, 2025
நாமக்கல் : மாநகராட்சியில் புதிய மேயர் அறை திறப்பு விழா

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி மேயர் அறையை திறப்பு விழா நடைபெற்றது. இதில் எம்பி ராஜேஷ்குமார் கலந்து கொண்டு இன்று திறந்து வைத்தார். நிகழ்வில் மாநகராட்சி மேயர் கலாநிதி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் உடன் நகர கழக செயலாளர்கள் செ.பூபதி (துணை மேயர்), செயலாளர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News October 13, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை !

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (அக்டோபர் 13) நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள நிலையில், நாளை (அக்டோபர் 14) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.