News October 13, 2025

கடலூர்: பெட்ரோல் பங்க் ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

image

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்(42). இவர் செட்டிபாளையம் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிப்புரிந்து வந்தார். இந்நிலையில், வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர், குடும்பப் பிரச்சினையால் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 14, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (அக்.13) இரவு 10 மணி முதல் இன்று (அக்.14) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News October 13, 2025

கடலூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

கடலூர் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<> electoralsearch.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தடுக்கலாம். SHARE !!

News October 13, 2025

கடலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.14) உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி அலுவலக வளாகம், கம்மாபுரம் வட்டாரம், அரசகுழி அருமை மகால், குமராட்சி வட்டம், உசுப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஸ்ரீனிவாசா திருமண மண்டபம் மற்றும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!