News October 13, 2025

தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த ஆட்சியர் சுப்புலட்சுமி

image

வேலூர் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்.13) பட்டாசு விற்பனையை கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். கடந்த ஆண்டு 85 லட்சத்திற்கு பட்டாசு விற்பனை நடந்தது. இந்த ஆண்டு 1 கோடி ரூபாய் அளவுக்கு பட்டாசு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வேலூர் மாவட்ட மக்கள் அனைவருக்கும் தன்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Similar News

News October 14, 2025

பட்டாசு கடை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்யும் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (அக் 13) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்பி மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஆணையாளர் லட்சுமணன் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 14, 2025

காவல்துறை இரவு ரோந்து பணி விபரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு வந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (அக்டோபர் 13) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News October 14, 2025

குடியாத்தம் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் லிங்குன்றம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட சரவணன் (32), வெங்கடேசன் (61), ரகுபதி (35), ராகவன் (30), சேர்ந்த ரவி (48) ஆகிய 5 பேரையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

error: Content is protected !!