News October 13, 2025
தருமபுரியில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி வரும் அக்.16ஆம் தேதி காலை 10.00 மணி முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8th,12th, டிப்ளமோ, ஐடிஐ முடித்தோர், மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 04342-288890 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். *நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க*
Similar News
News October 13, 2025
தருமபுரி: பெற்றோர் திட்டியதால் மாணவி விபரீத முடிவு

அரூர் வர்ணதீர்த்தம், கேகே நகரை சேர்ந்த யுவராஜ். இவரது மகள் ரித்திகா (21). இவர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், ரித்திகா செல்போனை அதிகளவில் பயன்படுத்தி வந்ததால் படிப்பில் கவனம் சிதைந்து விடும் எனக்கூறி பெற்றோர் ரித்திகாவை கண்டித்துள்ளனர். இதனால், மனம் உடைந்த அவர் நேற்று விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News October 13, 2025
தருமபுரி மக்களே பண மோசடியா? கவலை வேண்டாம்

லோன் மோசடி, சிட் ஃபண்ட், பரிசுச் சீட்டு, ஏலச்சீட்டு, கிரெடிட் கார்டு, டிஜிட்டல் பண மோசடி ஆகியன நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க TN போலீசில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) என்ற சிறப்பு பிரிவு செயல்படுகிறது. இந்த மோசடியில் நீங்கள் சிக்கியிருந்தால் வடக்கு மண்டல SP-044-22500319, EOW CONTROLL ROOM- 044-22504332, உங்கள் பகுதி EOW அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிரவும்.
News October 13, 2025
தருமபுரிக்கு வரும் திருமா!

வி.சி.க தருமபுரி மைய மாவட்டச் செயலாளா் த.கு.பாண்டியன் வெளியிட்ட அறிக்கையின்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழா, தோ்தல் அங்கீகார விழா மற்றும் 2026ம் ஆண்டு தோ்தல் நிதி அளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா தருமபுரி வள்ளலாா் திடலில் வரும் செவ்வாய்(அக்.14) நடைபெறுகிறது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் பங்கேற்க உள்ளார்.