News October 13, 2025
திமுக மீதான சந்தேகத்திற்கு விடை கிடைக்கும்: நயினார்

கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க SC உத்தரவிட்டதற்கு நயினார் நாகேந்திரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கரூர் விவகாரத்தில் திமுக அரசின் அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்கு கூடிய விரைவில் விடை கிடைக்கும் எனவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Similar News
News October 13, 2025
நீடா அம்பானியின் bag-ன் விலை ₹15 கோடியா!

ஒரு கோடி சம்பாதிப்பதே பலரின் வாழ்நாள் கனவாக இருக்கும். ஆனால், நம்.1 பணக்காரரான முகேஷ் அம்பானி மனைவிக்கு அதெல்லாம் சாதாரணம் தானே. ஆம், அண்மையில் ஒரு பார்ட்டிக்கு அவர் எடுத்துச் சென்ற Hermès Birkin ஸ்பெஷல் எடிஷன் மினி பேகின் விலை ₹15 கோடியாம். முதலை தோல் லுக்கில் உள்ள இந்த பேக் மீது 18k ஒயிட் கோல்டு பூச்சுடன், 3,025 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதை பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
News October 13, 2025
ஆண்களை மட்டுமே விடுவித்த ஹமாஸ்

2 ஆண்டுகளாக பணயக் கைதிகளாக இருந்த 20 பேரை இன்று ஹமாஸ் இஸ்ரேலிடம் ஒப்படைத்தது. நீண்ட காலத்துக்கு பின் குடும்பத்தினருடன் அவர்கள் இணைந்தது உணர்ச்சிகரமான நிகழ்வாக இருந்தது. இந்நிலையில், பணயக் கைதிகளாக உயிருடன் இருந்தவர்கள் எல்லோரையும் ஒப்படைத்து விட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஆனால், இவர்களில் யாருமே பெண்கள் இல்லை. இதனால், பெண்களை கொன்றுவிட்டனரா (அ) ஒளித்து வைத்துள்ளனரா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
News October 13, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா…?

திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால், 3 நாள்கள்(அக்.18,19,20) தொடர் விடுமுறையாகும். ஆனால், ஊர்களுக்குச் செல்லும் பலரும் தீபாவளி அன்றே புறப்பட வேண்டிய சூழல் உள்ளது. இதனால், தீபாவளிக்கு அடுத்த நாள்(அக்.21) விடுமுறை அளிக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்கூட்டியே அறிவித்தால் டிக்கெட் புக் செய்ய வசதியாக இருக்கும் என கூறுகின்றனர். இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது.