News October 13, 2025
மோசடி என தெரிந்தால், கரூர் தீர்ப்பு ரத்தாக வாய்ப்பு: வில்சன்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அரசு அமைத்த அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை தொடரும் என்று வில்சன் தெரிவித்துள்ளார். SC தற்போதைய ஆணையை மட்டுமே வழங்கி இருக்கிறது; இது இறுதி உத்தரவுக்கு உட்பட்டது எனக் கூறினார். மேலும், மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது தெரிந்தால், நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 13, 2025
தீபாவளி விடுமுறை.. பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு

தீபாவளி விடுமுறை கவனமாக பட்டாசு வெடிக்க வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, *கூட்டமான தெருக்கள், சாலைகளில் வெடிக்க வேண்டாம். *பெற்றோர் முன்னிலையில் குழந்தைகள் பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். *மூடிய பெட்டிகள், பாட்டில்களில் வைத்து வெடிக்கக் கூடாது. *குடிசைகள் அருகில் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். *ஹாஸ்பிடல் அருகே வெடிப்பதை தவிர்க்கவும். SHARE IT.
News October 13, 2025
தேர்தல் நேரத்தில் தேஜஸ்விக்கு வந்த சிக்கல்!

IRCTC ஹோட்டல் தொடர்பான ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், ராப்ரி தேவி ஆகியோருக்கு எதிராக டெல்லி நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. மூவர் மீதும் மோசடி, கிரிமினல் சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஹார் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில், இது RJD கட்சிக்கும், தேஜஸ்விக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
News October 13, 2025
BREAKING: விஜய் ஆதரவு

கரூர் துயர வழக்கை சிபிஐக்கு மாற்றி SC உத்தரவிட்டதை ஆதரிக்கும் விதமாக, தனது X பக்கத்தில் விஜய் பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு 13 நாள்களாகின்றன. அதன் பிறகு, சோஷியல் மீடியாவில் அவர் எந்த பதிவும் போடவில்லை. இந்நிலையில், ‘நீதி வெல்லும்’ என தற்போது பதிவிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ஆதரவளித்து தவெக தொண்டர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.