News October 13, 2025
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை அறிவிப்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் அக்.15,17,18-ல் புதுகை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட , மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
மயிலாடுதுறை: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு..

நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
மயிலாடுதுறை: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <
News December 7, 2025
மயிலாடுதுறை: பாம்பு கடித்து பெண் பலி

கொள்ளிடம் அருகே அரசூர் ஊராட்சி கண்டிராஜநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மனைவி வசந்தி. இவர் நேற்று வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது வரப்பிலிருந்து விரியன் பாம்பு கடித்ததில் மயக்கம் அடைந்தார். இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


