News October 13, 2025

பெரம்பலூர் அருகே திடீர் சாலை மறியல்

image

பெரம்பலூர் அருகே அறுமடல் சாலை பிரிவு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இந்நிலையில் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல், கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால் அதனை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 14, 2025

பெரம்பலூர்: சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

image

பெரம்பலூர், ஆலத்தூர் அருகே உள்ள காரை கிராமத்தில் வரகுபாடி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக இன்று காலை தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பேரில் எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் கோட்டத்தூரை கிராமத்தைச் சேர்ந்த வைரபெருமாள் மகன் ராஜா (55) என்பவரிடம் 150 மது பாட்டில்கள் இருந்தனர், அவரை போலீசார் கைது செய்தனர்.

News October 13, 2025

பெரம்பலூர்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch<<>>.eci.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதை தடுக்கலாம். SHARE !!

News October 13, 2025

பெரம்பலூர்: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள 1096 அலுவலக உதவியாளர், ஆலோசகர், சிறப்பு கல்வியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th,12th, UG/PG, B.E/B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேர்வு கிடையாது குறுகிய பட்டியல் (Shortlisting)மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!