News April 16, 2024

வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணிகள் ஆய்வு

image

மக்களவை பொதுத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இருப்பறை பாதுகாப்பு பணிகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் கிரண் குமாரி பாசி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

Similar News

News November 9, 2025

கிருஷ்ணகிரி: இந்த தொகுதியை விடக்கூடாது-ஸ்டாலின் எச்சரிக்கை!

image

கிருஷ்ணகிரியில்,திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுகவின் கே.பி. முனுசாமி போட்டியிடும் தொகுதி திமுகவும் சவாலாக இருக்கும் என கூறினார். அந்த தொகுதியை எந்த எதிர்க்கட்சியும் இழக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஓசூர், வேப்பனஹள்ளி உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில் திமுக வெற்றி பெறாவிட்டால், மாவட்ட செயலாளர் பதவி நீக்கப்படும் என ஸ்டாலின் எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 9, 2025

கிருஷ்ணகிரி: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து நவ.26ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

கிருஷ்ணகிரி: குளியலறையில் கேமரா – அடுத்தடுத்து ஷாக்!

image

கெலமங்கலம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தின் மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா வைத்து விடியோ எடுத்த வழக்கில், டெல்லியில் கைது செய்யப்பட்ட பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ரவி பிரசாத் சிங் விசாரணையில், கேமரா வைத்தது தொடர்பாக அவரிடம் 2 நாள்கள் போலீஸார் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதில், சமூக வலைதளங்களில் அவர் ஆபாச வீடியோக்களை பகிரவில்லை என தெரிகிறது. பின்னர் அவர் தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!