News October 13, 2025

திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News October 14, 2025

திண்டுக்கல்: மாணவர்களுடன் காபி வித் கலெக்டர்

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கொடைக்கானல் மலைப்பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுடன் உயர் கல்வி வழிகாட்டல், அடிப்படை வசதிகள், மற்றும் எதிர்கால இலக்குகள் குறித்து ஆட்சியர் நேரடியாக கலந்துரையாடி மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

News October 14, 2025

வத்தலகுண்டு: ராமச்சந்திரன் உடல் ஒப்படைப்பு

image

திண்டுக்கல் வத்தலகுண்டு அருகே ஆணவப் படுகொலை செய்யப்பட்ட ராமச்சந்திரன் உடல், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் அவரது மனைவி ஆர்த்தி கோரிக்கைகளை ஏற்று, கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தின் பேரில், இன்று மாலை ராமச்சந்திரன் உடல் ஆர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

News October 13, 2025

நத்தம் அருகே பெண் விபரீத முடிவு!

image

நத்தம் அருகே குடகிப்பட்டியை சேர்ந்தவர் அர்ஜீனன்(46) என்பவரின் மனைவி சித்ரா (40), இவர் கணவர் வெளியூரில் இருந்த நிலையில் தனது அம்மாவின் வீட்டில் தங்கியிருந்தார். கடன் பிரச்சனைக்காக பெற்றோர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் நேற்று இரவு சித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!