News October 13, 2025

கரூர் துயரம்: ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

image

கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணைக்கு எடுத்தது ஏன் என விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவிட்ட நிலையில் அதை மீறுவதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், எதையும் ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி, SIT விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

Similar News

News October 13, 2025

BREAKING: தங்கம் விலை ஒரே நாளில் தடாலடியாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் 2 முறை அதிகரித்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹200 அதிகரித்த நிலையில், மதியம் மேலும் ₹440 உயர்ந்திருப்பதால் ஒரே நாளில் ₹640 கூடியுள்ளது. தற்போது, 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,580-க்கும், 1 சவரன் ₹92,640-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

News October 13, 2025

RCB உடன் ஒப்பந்தம்: மறுத்த விராட் கோலி!

image

RCB உடனான வணிக ஒப்பந்தத்தை புதுப்பிக்க விராட் கோலி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் IPL-ல் இருந்து கோலி <<17989900>>ஓய்வுபெறுகிறாரா<<>> என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, அவருக்கு வணிக ஒப்பந்தம், விளையாட்டு ஒப்பந்தம் என இரட்டை ஒப்பந்தம் இருக்கலாம் என்றார்.

News October 13, 2025

BREAKING: பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு

image

2025-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மொகிர், பிலிப் அகியான், பீட்டர் ஹோவிட் ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். பொருளாதாரப் பிரிவுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு ‘THE SVERIGES RIKSBANK PRIZE’ என்று அழைக்கப்படுகிறது.

error: Content is protected !!