News October 13, 2025
BREAKING: கரூர் துயர வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று SC தீர்ப்பளித்துள்ளது. கரூர் வழக்கை விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் SIT குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
RCB உடன் ஒப்பந்தம்: மறுத்த விராட் கோலி!

RCB உடனான வணிக ஒப்பந்தத்தை புதுப்பிக்க விராட் கோலி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் IPL-ல் இருந்து கோலி <<17989900>>ஓய்வுபெறுகிறாரா<<>> என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேநேரம், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, அவருக்கு வணிக ஒப்பந்தம், விளையாட்டு ஒப்பந்தம் என இரட்டை ஒப்பந்தம் இருக்கலாம் என்றார்.
News October 13, 2025
BREAKING: பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு

2025-ம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜோயல் மொகிர், பிலிப் அகியான், பீட்டர் ஹோவிட் ஆகியோர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். பொருளாதாரப் பிரிவுக்கு வழங்கப்படும் நோபல் பரிசு ‘THE SVERIGES RIKSBANK PRIZE’ என்று அழைக்கப்படுகிறது.
News October 13, 2025
சிபிஐக்கு மாற்றியதில் மகிழ்ச்சி: அண்ணாமலை

கரூர் துயர வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐக்கு மாற்றியது மகிழ்ச்சி அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், கரூர் சம்பவத்தில் முதலில் சிபிஐ விசாரணை கோரியது பாஜக தான் என்று குறிப்பிட்டார். கரூர் சம்பவத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.