News April 16, 2024
சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய முதல்வர்

வாக்கு சேகரிப்பின் போது முதல்வர் ஸ்டாலின் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். வட சென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து கொளத்தூரில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது மைதானம் ஒன்றில் சிறுவர்களுடன் சில நிமிடங்கள் கால்பந்து விளையாடினார். முதல்வரை கண்டதும் சிறுவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர். சிலர் தங்களது கால்பந்தில் அவரிடம் கையெழுத்து பெற்றுச் சென்றனர்.
Similar News
News October 30, 2025
ADMM-Plus மாநாடு: மலேசியா செல்கிறார் ராஜ்நாத் சிங்

மலேசியாவில் ASEAN மாநாடு நடைபெற்றது. இதை தொடர்ந்து, நவ.1-ம் தேதி ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டமைப்பின் பிளஸ் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று அவர் மலேசியா புறப்படுகிறார். ADMM-Plus மாநாட்டில், பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
News October 30, 2025
கொத்து கொத்தா கொட்டும் முடி ஒரே வாரத்தில் சரியாக TIPS!

வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுவதாக சித்தா டாக்டர்கள் சொல்றாங்க. ➤2 ஸ்பூன் வெந்தய விதைகளை தண்ணீரில் ஊற வையுங்கள் ➤அதை தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள் ➤ அந்த பேஸ்ட்டை Scalp, தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் ➤பிறகு வெதுவெதுப்பான நீர் & ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.
News October 30, 2025
நாளை மறுநாள் இங்கு பள்ளிகளுக்கு லீவு இல்லை!

மழை காரணமாக கடந்த 22-ம் தேதி விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 1-ம் தேதி(சனிக்கிழமை) பள்ளிகள் இயக்கும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். கடந்த 22-ம் தேதி அன்று தொடர் மழை காரணமாக 17 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வீடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்ற மாவட்டங்களில் இருந்தும் விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


