News October 13, 2025

BREAKING: விஜய்க்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்

image

கரூரில் 41 பேர் பலியான வழக்கில், CBI விசாரணை கோரி தாங்கள் SC-ல் மனு தாக்கல் செய்யவில்லை என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மகனை இழந்த பன்னீர்செல்வம், மனைவியை இழந்த செல்வராஜ், சகோதரியை இழந்த பிரபாகர் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளனர். CBI விசாரணை கோரிய வழக்கில் 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், கடைசி நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Similar News

News October 13, 2025

மோசடி என தெரிந்தால், கரூர் தீர்ப்பு ரத்தாக வாய்ப்பு: வில்சன்

image

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், அரசு அமைத்த அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணைய விசாரணை தொடரும் என்று வில்சன் தெரிவித்துள்ளார். SC தற்போதைய ஆணையை மட்டுமே வழங்கி இருக்கிறது; இது இறுதி உத்தரவுக்கு உட்பட்டது எனக் கூறினார். மேலும், மோசடியாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது தெரிந்தால், நீதிமன்றம் தீர்ப்பை ரத்து செய்துவிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

News October 13, 2025

தீபாவளி தீக்காயங்களுக்கு ஒரே போன் கால் போதும்!

image

பாதுகாப்பான முறையில் தீபாவளியை கொண்டாட மக்களாகிய நாமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்நிலையில், தீபாவளி அன்று தீக்காயம் (அ) பிற அவசர மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் ‘108’ என்ற ஒரே எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. போன் செய்த அடுத்த சில நிமிடங்களில் குறிப்பிட்ட இடத்திற்கு வருவதற்கு ஏற்றார்போல், ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2025

ரஜினி, தனுஷ் வரிசையில் PR: நாகர்ஜுனா

image

சில தசாப்தங்களுக்கு முன்பு நெருப்பு போன்று ஒருவர் வந்து சினிமாவின் விதியையே மாற்றினார், அவர் தான் ரஜினிகாந்த். அதற்கு பிறகு ஒல்லியான ஒருவர் இளைஞர்களின் ஆதரவை பெற்றார், அவர் தனுஷ். அந்த வகையில், தற்போது ஒருவர் வந்துள்ளார், அவர் தான் பிரதீப் ரங்கநாதன் என்று மாஸ் இன்ட்ரோ கொடுத்து புகழ்ந்துள்ளார் நாகர்ஜுனா. உங்களுக்கு பிரதீப்பிடம் பிடித்தது என்ன? கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!