News October 13, 2025
மத்திய அரசில் ₹55,000 சம்பளத்தில் வேலை

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 474 பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: B.E, B.Tech, M.Sc (சில பாடப்பிரிவுகள் மட்டும்). வயது வரம்பு: 21 – 30. தேர்வு முறை: முதல்நிலை, முதன்மை தேர்வுகள், நேர்முக தேர்வு. சம்பளம்: ₹55,135 முதல். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.16. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News October 13, 2025
கரூர் வழக்கு: CBI விசாரணை யாருக்கு கிடைத்த வெற்றி?

கரூர் கூட்ட நெரிசல் வழக்கை CBI-க்கு SC மாற்றியுள்ளது. இது, TN அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அரசின் ஒருநபர் விசாரணை ஆணையம், ஐகோர்ட்டின் SIT-க்கு எதிராக TVK மற்றும் CBI விசாரணை கேட்டு 3 பேர் தொடர்ந்த வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது மோசடியாக தொடரப்பட்ட வழக்குகள் எனவும், பாஜக விரும்பியதுபோல் CBI விசாரணை நடக்க உள்ளது எனவும் DMK வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார்.
News October 13, 2025
எப்பவும் சோர்வா இருக்கா? இத கவனிங்க முதல்ல!

நன்றாக தூங்கி எழுந்தாலும், அடிக்கடி சோர்வாக இருப்பதாக தோன்றுகிறதா? அப்படி இருந்தால் நமது உடலில் ஏதேனும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்று அர்த்தம். முக்கியமாக இரும்புச்சத்து, வைட்டமின் D, வைட்டமின் B12, மக்னீசியம், வைட்டமின் B9 ஆகியவை குறைவாக இருந்தால் அதிக சோர்வு, தசைப்பிடிப்பு, மனநிலை மாற்றங்கள் ஏற்படும். எனவே, உடனே டாக்டரை அணுகி, குறைபாட்டை அறிந்து, சரியான உணவு முறையை பின்பற்றுங்க.
News October 13, 2025
அரசியல் வெற்றியா? துயரில் துவள்பவர்களுக்கான நீதியா?

கரூர் துயரம், திமுக அரசின் சதி என்று முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டால் ‘Stand with Viay’ என்று ஒரு கூட்டம் கிளம்பியது. இந்த சமயத்தில் அரசியல் பேசாமல், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்க வேண்டும் என்று ‘Stand with victims’ என்றும் நெட்டிசன்கள் குரல் எழுப்பினர். இந்நிலையில், CBI விசாரணைக்கு மாற்றம் என்ற SC-ன் தீர்ப்பு தவெகவிற்கு கிடைத்த வெற்றி என்ற பேச்சு எழுந்துள்ளது. இந்த தீர்ப்பு யாருக்கு வெற்றி?