News April 16, 2024

தபால் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு

image

மக்களவைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை தபால் வாக்கு செலுத்தாத முதியவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இன்று மாலை 5 மணி வரை வாக்குகளை செலுத்தலாம். அரசு ஊழியர்கள் சிலருக்கு அவர்களின் தொகுதியில் இருந்து பணியாற்றும் இடங்களுக்கு இதுவரை வாக்குச்சீட்டு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், பாதிக்கப்பட்ட நபர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Similar News

News November 15, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 15, ஐப்பசி 29 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: அவிட்டம் ▶சிறப்பு: ஏகாதசி விரதம், கருட தரிசனம் நன்றி. ▶வழிபாடு: பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்.

News November 15, 2025

35 ஆண்டுகளாக MLA-கள்.. மீண்டும் வெற்றி

image

பிஹார் NDA கூட்டணி மூத்த வேட்பாளர்களான பிரேம் குமார் (BJP), பிஜேந்திர பிரசாத் யாதவ் (JDU) ஆகியோர், 9-வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் 1990 முதல் MLA-க்களாக உள்ளனர். கயா தொகுதியில் பிரேம் குமார் 26,423 வாக்குகள் வித்தியாசத்திலும், பிஜேந்திர சிங் 30,803 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றுள்ளனர். இருவரும் இதே தொகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளாக MLA-க்களாக உள்ளனர்.

News November 15, 2025

வி.சேகர் மறைவு வேதனை அளிக்கிறது: அன்புமணி

image

திரைப்பட இயக்குநர் வி.சேகர் மறைவு வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கான கருவிகள் என்பதையும் கடந்து, தமது திரைப்படங்கள் வாயிலாக பொதுவுடமை, சமத்துவம், சமூகநீதி கருத்துகளைப் பரப்பியவர். முகம் சுழிக்காமல் குழந்தைகளுடன் குடும்பமாக சேர்ந்து பார்க்கும் வகையிலான திரைப்படங்களை படைத்தவர் வி.சேகர் என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

error: Content is protected !!