News October 13, 2025

BREAKING: தமிழகத்தில் ED அதிகாரிகள் அதிரடி ரெய்டு

image

மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிப் சிரப் குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தமிழகத்தில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் வீடு, தமிழக அரசின் மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீபா ஜோசப், கார்த்திகேயன் வீடுகளில் அதிகாலை முதலே இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த வழக்கில் 2 அதிகாரிகளை TN அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தது.

Similar News

News March 20, 2026

போரில் இஸ்ரேல் வெற்றிபெற போகிறது: நெதன்யாகு

image

ஈரானுடனான போரில் தாங்கள் வெற்றிபெற போவதாக இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்துள்ளார். எதிர்பார்த்ததை விட முன்னதாகவே போர் முடிவுக்கு வரும் எனவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவை போரில் இஸ்ரேல் <<19412334>>இழுக்கவில்லை <<>>என்றும், இருவருமே ஈரானை குறி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், டிரம்ப் என்ன செய்ய வேண்டும் என யாராவது சொல்ல முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 20, 2026

ரயிலில் இரவு 10 – காலை 6 மணி ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

image

*இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே மிடில் பெர்த்தை (Tier 3 AC, Sleeper) உபயோகிக்க வேண்டும் *ஷார்ட் சர்க்யூட்டை தவிர்க்க இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை சார்ஜிங் பாயிண்ட்கள் Off-ல் இருக்க வேண்டும் *இரவு 10 மணிக்கு மேல் அதிகமான சத்தத்துடன் பேசவோ, பாடல்கள் கேட்கவோ கூடாது *தேவையில்லாத போது மின் விளக்குகளை Off செய்ய வேண்டும் *உங்கள் டிக்கெட்டை TTE உடனடியாக செக் செய்யலாம்.

News March 20, 2026

இறப்பதை விட இருந்து போராட வேண்டும்: சீமான்

image

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் சிவா உயிரிழந்தது மிகுந்த மனவேதனை தந்ததாக சீமான் தெரிவித்துள்ளார். இனப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட தன்மானத் தீரர்கள் இறந்து போராடுவதை விடவும், இருந்து போராட வேண்டும் என்பதை இனிவரும் தலைமுறையினருக்கு சொல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறந்தவரின் குடும்பத்துக்கு தனது இரங்கலையும் சீமான் கூறியுள்ளார்.

error: Content is protected !!