News October 13, 2025
நெல்லை: அக்காள், தம்பியை கடத்திய 2 பேர் கைது

டவுன் பழனி தெருவை சேர்ந்த பார்வதி என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் வானுமாமலை என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாரம் ரூ.10,000 வட்டி செலுத்தி வந்துள்ளார். ஒரு மாதம் வட்டி செலுத்தவில்லை. நேற்று முன்தினம் பார்வதி தனது தம்பியுடன் சுத்தமல்லியில் நின்று கொண்டிருந்த போது வானுமாமலை 2 பேரையும் காரில் கடத்தி சென்று மிரட்டியுள்ளார். இதில் பேட்டை போலீசார் நேற்று வானுமாமலையை கைது செய்தனர்
Similar News
News October 13, 2025
BREAKING: சேரை கல்லூரி பேராசிரியர் மீது வழக்கு

சேரன்மகாதேவி பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி பேராசிரியர் ஒருவரை மாணவர்கள் தாக்கினர். எனவே மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில் பேராசியர் மீது புகார் எதுவும் கொடுக்காததால் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் பேராசிரியர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளதாக எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
நெல்லை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News October 13, 2025
நெல்லையில் கோழிகளை வீசி சென்ற மர்ம நபர்கள்

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள மதவ குறிச்சி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நேற்று மாலை ஏராளமான இறந்த கோழிகள் கொட்டி குவிக்கப்பட்டு கிடந்தன. மர்ம நபர்கள் இதைக் கொட்டி சென்றதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது. இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் கோழிகளை வீசிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.