News April 16, 2024
தாம்பரம் – மங்களூர் இடையே சிறப்பு ரயில்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து வரும் ஏப்.19 முதல் மே.31 வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரம் – மங்களூர் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, ஷோரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 30, 2025
தொழிலாளியின் கன்னத்தை கடித்து துப்பிய போதை ஆசாமி

கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த இம்ரான்(38), லாலி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றபோது, அங்கு வந்த ராஜனுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜன், இம்ரானின் கன்னத்தை கடித்து துப்பினார். காயமடைந்த இம்ரான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 29, 2025
கோவை: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

கோவை சூலூரை சேர்ந்த ஸ்ரீநிவேதா, தனது தாயார் வாணியுடன் காரில் செஞ்சேரி மலை முருகன் கோயிலுக்கு சென்றிருக்கிறார். பார்க்கிங்கில் காரை நிறுத்த முயன்ற போது, பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால், 40 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக ஏர்பேக் ஓபன் ஆனதால், இருவரும் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 29, 2025
கோவை: முக்கிய காவல் நிலைய தொடர்பு எண்கள்!

காந்திபுரம் – 9498101143.
ஆர்.எஸ்.புரம் – 0422-2475777.
மதுக்கரை – 9498101184.
பேரூர் – 0422-2607924.
தொண்டாமுத்தூர் – 0422-2617258.
பெ.நா.பாளையம் – 9498101189.
மேட்டுப்பாளையம் – 9498101186.
அன்னூர் – 9498101173.
கருமத்தம்பட்டி – 9498101178.
சூலூர் – 7845175782.
பொள்ளாச்சி டவுன் – 04259-224433.
ஆனைமலை – 04253-282230.
வால்பாறை – 9487374392. இதை SHARE பண்ணுங்க.