News October 13, 2025

கரூர் துயரம்: SIT குழுவில் கூடுதலாக SP சேர்ப்பு

image

கரூர் துயரம் தொடர்பாக, IG அஸ்ரா கார்க் தலைமையிலான SIT விசாரித்து வருகிறது. இந்த குழுவில் 2 SP, 1 கூடுதல் SP, 2 DSP, இன்ஸ்பெக்டர்ஸ், கான்ஸ்டபிள்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தும் நோக்கில் திருவாரூர் SP கரண் கரட், SIT குழுவில் கூடுதல் அதிகாரியாக சேர்க்கப்பட்டுள்ளார். CBI விசாரணை கோரிய தவெக மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 13, 2025

20 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிப்பு

image

காசா அமைதிக்கான உச்சி மாநாடு, இன்று எகிப்தில் நடைபெறுகிறது. முன்னதாக, போர் நிறுத்தம் தொடர்பாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனையடுத்து, 20 இஸ்ரேல் பணயக் கைதிகளை ஹமாஸ் இன்று விடுவித்துள்ளது. ஏற்கெனவே 20 பணயக் கைதிகளின் பட்டியல் இஸ்ரேலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் காசாவிலிருந்து ரெட் கிராஸ் வாகனங்கள் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

News October 13, 2025

தமிழக அரசு அவசரம் காட்டக்கூடாது: ராமதாஸ்

image

சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் TN அரசு அவசரம் காட்டக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது சமூக ஒற்றுமைக்கு எதிராக உள்ளது என்று கூறியுள்ள அவர், காலங்காலமாக இருக்கும் பெயர்களை நீக்குவது மக்களிடத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பொறுமையோடு, மக்களின் கருத்தறிந்து முறையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News October 13, 2025

4 நாள்களுக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

image

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவதற்கான அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் முடிவில், நாளை (அக்.14) முதல் அக்.17 வரை கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாளை, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பு, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

error: Content is protected !!