News October 13, 2025
ஆவடி: வரி செலுத்தாதவர்கள் கவனத்திற்கு

ஆவடி மாநகராட்சியில் வரி வசூல் மையங்கள் மக்கள் வசதிக்காக பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. வரி செலுத்தும் கடைசி தேதி அக்.31 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குள் செலுத்தினால் 5% தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிரதான அலுவலகம், பருத்திப்பட்டு பூங்கா, சோழபேடு, திருமுல்லைவாயில், காமராஜ் நகர், பட்டாபிராம் உள்ளிட்ட வரி வசூல் மையங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவல் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (அக்.30) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
BREAKING: திருவள்ளூர்: நவம்பர் 1-ல் பள்ளிகள் இயங்கும்!

மொந்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த அக்.28ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் நவம்பர் 1ம் தேதி பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
திருவள்ளூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


