News October 13, 2025
தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டப்பேரவை நாளை கூடுகிறது. சட்டசபை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. பின்னர், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. குறிப்பாக இந்தக் கூட்டத்தொடரில் காசா போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. தேர்தல் நெருங்குவதால் இக்கூட்டத் தொடரில் காரசார விவாதத்திற்கு பஞ்சம் இருங்காது.
Similar News
News October 13, 2025
தமிழக அரசு அவசரம் காட்டக்கூடாது: ராமதாஸ்

சமூக, சாதிய அடையாள பெயர்களை மாற்றுவதில் TN அரசு அவசரம் காட்டக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது சமூக ஒற்றுமைக்கு எதிராக உள்ளது என்று கூறியுள்ள அவர், காலங்காலமாக இருக்கும் பெயர்களை நீக்குவது மக்களிடத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் பொறுமையோடு, மக்களின் கருத்தறிந்து முறையாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News October 13, 2025
4 நாள்களுக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்துவதற்கான அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் முடிவில், நாளை (அக்.14) முதல் அக்.17 வரை கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாளை, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிப்பு, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். தொடர்ந்து நடைபெறும் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.
News October 13, 2025
CBI விசாரணை கேட்ட மனுக்கள் மோசடியானவை: TN அரசு

கரூர் சம்பவம் தொடர்பாக CBI விசாரணை கேட்ட மனுக்கள் மோசடியானவை என தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. கரூரில் உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வத்திற்கு எதிராக, அவரது மனைவி காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். முன்னதாக, இந்த வழக்குகளை தாங்கள் தாக்கல் செய்யவில்லை என SC-ல் இன்று காலை புதிதாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.