News October 13, 2025

கடன் தொல்லை போக்கும் மிளகு தீபம்!

image

திங்கள் இரவில், 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டி, அதனை தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். செவ்வாய் காலை குளித்துவிட்டு, அந்த மூட்டையை பைரவர் சன்னதிக்கு எடுத்துச்சென்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். தொடர்ந்து 9 வாரம் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.

Similar News

News October 13, 2025

கரூர் சம்பவத்திற்கு போலீசாரே காரணம்: ஆதவ் அர்ஜுனா

image

கரூர் பிரசாரத்திற்கு விஜய், தாமதமாக வந்தார் என சொல்வது அபாண்டமான பொய் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் காவல்துறைதான் தங்களை வரவேற்றது என விளக்கம் அளித்துள்ளார். கரூரில் அசாதாரண சூழல் நிலவுவதாக இருந்தால் பெரம்பலூர் மாவட்டத்தை போல ஏன் தங்களுக்கு முதலிலேயே கூறவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News October 13, 2025

கரூர் துயரம்: ஐகோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

image

கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணைக்கு எடுத்தது ஏன் என விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவிட்ட நிலையில் அதை மீறுவதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், எதையும் ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி, SIT விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

News October 13, 2025

BREAKING: விஜய்க்கு முதல் வெற்றி

image

SC உத்தரவை அடுத்து, கரூர் விவகார வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. TN அரசின் கீழ் செயல்படும் அதிகாரிகள் கரூர் விவகாரத்தை விசாரிக்கக்கூடாது என TVK கோரிக்கை விடுத்ததுபோல் இத்தீர்ப்பு வந்துள்ளது. இது, விஜய் தரப்புக்கு முதல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!