News October 13, 2025
கடன் தொல்லை போக்கும் மிளகு தீபம்!

திங்கள் இரவில், 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டி, அதனை தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். செவ்வாய் காலை குளித்துவிட்டு, அந்த மூட்டையை பைரவர் சன்னதிக்கு எடுத்துச்சென்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். தொடர்ந்து 9 வாரம் இந்த மிளகு பரிகாரத்தை செய்து வந்தால் கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.
Similar News
News March 7, 2026
திருப்பத்தூர்: மாறிய நிலோபர்… மாறுமா வாணியம்பாடி?

கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று அமைச்சரானவர் நிலோபர். சமீபத்தில் நடந்த திமுக கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இவர் திமுகவில் இணைந்தார். தற்போது வாணியம்பாடி தொகுதி அதிமுக வசம் இருக்கும் நிலையில், நிலோபர் கபிலால் சிறுபான்மையினர் ஓட்டு திமுகவிற்கு விழ அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். வாணியம்பாடி திமுகவின் கோட்டை ஆகுமா இல்லை கனவோடுநிற்குமா?
News March 7, 2026
இதுபோல் அரசியல் செய்ய மாட்டோம்: சீமான்

தமிழகத்தில் பணவசதி படைத்தவன்தான் அரசியல் செய்ய முடியும்; வாக்குக்கு காசு கொடுக்காதவர்கள் வெல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். பணம் இருக்கிறவன்தான் அரசியல் செய்ய முடியும் என்றால் உழைக்கும் மக்களுக்கான அரசியலோ, அதிகாரமோ இந்த நிலத்தில் இருக்காது என்றார். பணத்தை முன்னிறுத்தி அரசியல் செய்ய நாங்கள் வரவில்லை; மக்களுக்கு நல்லாட்சி தர வந்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
News March 7, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹25,000.. வங்கிக்கு வந்தது!

முதல்முறையாக ஒரு பெண்ணுக்கு மகளிர் உரிமைத்தொகை ₹25,000 வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கோவை, கொண்டம்பட்டியை சேர்ந்த மகேஸ்வரி 2025 ஜூலையில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தார். ஆனால், அவரது பெயர் ஏற்கெனவே KMUT-ல் இருந்துள்ளது. மகேஸ்வரியின் வங்கி கணக்கிற்கு பதிலாக UP-ஐ சேர்ந்த சாந்திதேவியின் வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டிருந்தது. இதனால், சப்-கலெக்டர் உத்தரவால் ஒரே தவணையாக ₹25,000 வழங்கப்பட்டது.


