News October 13, 2025

11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்

image

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தருமபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 18-ம் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. எனவே, வெளியே செல்லும் போது கவனமாக இருங்க.

Similar News

News October 13, 2025

BREAKING: கரூர் துயர வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

image

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று SC தீர்ப்பளித்துள்ளது. கரூர் வழக்கை விசாரிக்க ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் SIT குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகளில் இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News October 13, 2025

ப.சிதம்பரம் கருத்தால் காங்கிரஸ் தலைமை அதிருப்தி

image

ஆபரேஷன் ப்ளு ஸ்டாரை பற்றிய ப.சிதம்பரம் கருத்தால் காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளது. கட்சியின் முக்கியமான தலைவராக இருக்கும் தாங்கள், இக்கருத்தை தவிர்த்திருக்க வேண்டும் எனவும், பொதுவெளியில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் தலைமை அறிவுறுத்தியுள்ளதாம். ஆபரேஷன் ப்ளு ஸ்டாரை இந்திராகாந்தி நடத்தியது தவறு என்றும், அதனால்தான் அவரது உயிர் போய்விட்டது எனவும் ப.சிதம்பரம் நேற்று பேசியிருந்தார்.

News October 13, 2025

மழை பெய்யுமா? பின்கோடு தெரிந்தால் போதும்

image

பின்கோடை உள்ளிட்டால் வானிலை நிலவரத்தை அறிய மத்திய அரசின் ‘<>Mausamgram<<>>’ என்ற இணையதளம் உதவுகிறது. இது ‘Mausam’ என்ற ஆப் வடிவிலும் உள்ளது. இதில் மாநிலம், மாவட்டம், வட்டம் ஆகியவற்றின் அடிப்படையிலும் வானிலை முன்னறிவுப்புகளை அறியலாம். இந்த அறிவிப்புகள் தமிழ் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பிராந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!