News October 13, 2025
விழுப்புரம்: தங்க நகை திருட்டு: இளைஞர் கைது

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் சாஸ்தா நகர் பகுதியில் உள்ள முனியம்மாள் என்பவர் வீட்டில், கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவரை, போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 1/2 சவரன் தங்க நகைகளை கைப்பற்றப்பட்டது.
Similar News
News March 4, 2026
விழுப்புரம்: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு!

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
News March 4, 2026
விழுப்புரம்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். விழுப்புரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News March 4, 2026
புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் ஆட்சியர் ஆய்வு

மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி பகுதியில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டடப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (மார்ச்.04) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஆட்சியருடன் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


