News October 12, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.12] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அசோக்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News October 13, 2025

நெல்லை: பெட்ரோல் குண்டு வீச்சு – சிக்கிய நபர்கள்

image

தச்சநல்லூர் காவல் நிலையம் அருகேயும், தாழையூத்து காவல் சோதனை சாவடி அருகேயும் 2 பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றுள்ளனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் பைக்கில் வந்த மர்ம நபர்களை CCTV காட்சி மூலம் கண்டறிந்தனர். இதில் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த அஜித் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் உட்பட 5 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

News October 12, 2025

நெல்லை மக்களே இது ரொம்ப முக்கியம்.!

image

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

News October 12, 2025

நெல்லையில் டிஆர்பி தேர்வு; 452 பேர் ஆப்சென்ட்

image

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இன்று முதுகலை ஆசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5527 தேர்வுகள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் 5527 பேரில் 5075 பேர் மட்டுமே தேர்வெழுத வந்தனர். 452 பேர் தேர்வு எழுத வரவில்லை.

error: Content is protected !!