News October 12, 2025
கரூர் துயரம்: பணத்துக்காக CBI விசாரணையா?

கரூர் துயரில் உயிரிழந்த 10 வயது சிறுவனின் தந்தை CBI விசாரணை கோரி SC-ல் மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால், குழந்தை பிறந்த ஒரே ஆண்டில் தன்னை விட்டுச் சென்ற கணவர், பணத்திற்காகவே வழக்கு போட்டுள்ளதாக, சிறுவனின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மகனின் வயதை கூட 13 என தவறாக குறிப்பிட்டுள்ளதாக கூறிய அவர், இறுதிச் சடங்கிற்கு கூட வரவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News March 25, 2026
மல்லிகை விலை ஒரேஅடியாக குறைந்தது!

TN முழுவதும் மல்லிகைப்பூ விலை ஒரேஅடியாக குறைந்துள்ளது. ஈரோடு, மதுரை, திண்டிவனம், ஓசூர் உள்ளிட்ட சந்தைகளில் தற்போது 1 கிலோ ₹400-க்கு விற்பனையாகிறது. சுபமுகூர்த்தம், கோயில் திருவிழா வருவதால் இந்த விலைச் சரிவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்றுமதி தடை, விளைச்சல் அதிகரிப்பே இந்த விலைச் சரிவுக்கு காரணமாகும். கடந்த ஜன.10-ம் தேதி ஒரு கிலோ மல்லி விலை ₹12,000-க்கு விற்பனையானது கவனிக்கத்தக்கது.
News March 25, 2026
மல்லிகை விலை ஒரேஅடியாக குறைந்தது!

TN முழுவதும் மல்லிகைப்பூ விலை ஒரேஅடியாக குறைந்துள்ளது. ஈரோடு, மதுரை, திண்டிவனம், ஓசூர் உள்ளிட்ட சந்தைகளில் தற்போது 1 கிலோ ₹400-க்கு விற்பனையாகிறது. சுபமுகூர்த்தம், கோயில் திருவிழா வருவதால் இந்த விலைச் சரிவால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்றுமதி தடை, விளைச்சல் அதிகரிப்பே இந்த விலைச் சரிவுக்கு காரணமாகும். கடந்த ஜன.10-ம் தேதி ஒரு கிலோ மல்லி விலை ₹12,000-க்கு விற்பனையானது கவனிக்கத்தக்கது.
News March 25, 2026
EPS எல்லாம் பாஜகவுக்கு சாதாரணம்: உதயநிதி

EPS அலுவலகமே டெல்லிக்கு மாறிவிட்டதாக உதயநிதி விமர்சித்துள்ளார். இதனால் ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்துக்கு அவர் சென்றாலே ‘Breaking news’ வரும் நிலை ஏற்பட்டுள்ளது என கிண்டலடித்த அவர், அதிமுகவில் இருந்தவர்களையும் சேர்த்து காப்பாற்றும் தலைவராக ஸ்டாலின் உள்ளதாக கூறியுள்ளார். மேலும், நிதிஷ்குமாரையே பிஹாரை விட்டு வெளியேற்றிய பாஜகவுக்கு, EPS எல்லாம் சாதாரணம் என்றும் விமர்சித்துள்ளார்.


