News October 12, 2025
தங்க நகைகளை பிங்க் பேப்பரில் வைத்து தருவது ஏன்?

நகைக் கடைகளில் வெள்ளி அல்லது தங்கம் வாங்கும்போது அதை பிங்க் நிற காகிதத்தில் மடித்து தருவது வழக்கம். இதன் பின்னணியில் விஞ்ஞான காரணங்கள் இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இதற்கு பின்னால் வியாபார யுக்தி மட்டுமே உள்ளது. அதாவது பிங்க் நிறத்துக்கு வெள்ளி மற்றும் தங்க நகைகளை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், பிரகாசமாகவும் காட்டும் தன்மை உள்ளதாம்.
Similar News
News March 13, 2026
BREAKING: திமுகவில் அதிரடி மாற்றம்.. இதுவே முதல்முறை

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்த ராஜீவ் காந்தி, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார். இந்நிலையில், மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து திடீரென்று மாற்றப்பட்டுள்ளார். அந்த பதவியில் ஜெ.வீரமணி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாணவரணியின் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. மேலும், ராஜீவ்காந்தி கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
News March 13, 2026
பங்குச் சந்தையில் ₹23.44 லட்சம் கோடி சரிவு

மேற்காசிய போர் தொடங்கியதிலிருந்து BSE Sensex 5,252 புள்ளிகள் (6.46%) சரிந்துள்ளதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி முதல் BSE-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மதிப்பு, ₹23.4 லட்சம் கோடி சரிந்து ₹4.40 லட்சம் கோடி ஆனது. முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாக பங்குகளை விற்று வெளியேறியதே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
News March 13, 2026
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வணிகர் சங்கம்

மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விளக்கங்கள் கொடுத்த நிலையிலும், பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் குறைந்தபாடில்லை. வழக்கமாக நாள் ஒன்றுக்கு 2 கோடி லிட்டர் வரை பெட்ரோல் விற்பனையாகும் நிலையில், நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் 3.5 கோடி லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இல்லை என்று பெட்ரோலிய வணிகர் சங்கம் மீண்டும் விளக்கமளித்துள்ளது.


