News October 12, 2025
BREAKING: கரூர் துயரம்.. அதிரடி கைது

கரூர் துயர சம்பவத்தில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியதாக திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் S.M.நிர்மல்குமாரை சாணார்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் N.ஆனந்த், CTR நிர்மல்குமார் ஆகியோர் எங்கே இருக்கின்றனர் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இவ்வழக்கில் கரூர் மேற்கு மா.செ., மதியழகனும், சேலம் கிழக்கு மா.செ., வெங்கடேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News October 12, 2025
சாக்லேட் ஸ்வீட்டி சாக்ஷி அகர்வால் கிளிக்ஸ்

கற்பனைக்கும் எட்டாத அழகிய கருவிழி, அதன் மேல் வித்தை காட்டும் வில் போன்ற கருமை நிறம் கொண்ட புருவங்கள், மனம் மயங்கும் மணம் கொண்ட அடர் கருப்பு நிற தலைமுடி என்று சில அங்கங்களில் மட்டுமே உள்ள கருமையே கவர்ந்திழுக்கும். ஆனால், இன்று சாக்ஷியோ, பேரழகை வெட்கத்தோடு போர்த்தியிருக்கும் புடவை, சிணுங்கல் ஓசை கொண்ட வளையல் என அனைத்திலும் கருமையை வைத்து கிறங்கடித்துள்ளார். சாக்ஷியின் அழகுக்கு லைக்ஸ் போடுங்க.
News October 12, 2025
இந்திய வீராங்கனைகளுக்கு பெருமை சேர்ந்த ஆந்திரா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய முன்னாள் கேப்டன் மித்தாலியை ஆந்திர மாநில அரசு கௌரவித்துள்ளது. இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டியின் போது அவரது பெயரில் கேலரி ஒன்று திறக்கப்பட்டது.
அதேபோல் விக்கெட் கீப்பர் ரவி கல்பனா பெயரும் ஒரு கேலரிக்கு சூட்டப்பட்டு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.
News October 12, 2025
ஒரு முறை மட்டுமே… அது எது?

`ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா’ என்று காதலை கவிஞர்கள் வர்ணித்தாலும், காதலும் பலமுறை மலரலாம். ஆனால், சில பொருள்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். இரண்டாம் முறை என்பது சாத்தியமே இல்லை அல்லது பயன்படுத்தவே கூடாது. அப்படிப்பட்ட பொருள்களில் சிலவற்றை மேலே உள்ள படங்களில் காணலாம். உங்களுக்கு தெரிந்த, ஒருமுறை மட்டுமே பயன்படும் பொருள்களை கமெண்ட்டில் சொல்லுங்களேன்.