News October 12, 2025

புதுக்கோட்டை: கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

image

ஆலங்குடி பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி அருகே கோட்டைக்காடு மாதா கோவில் தெருவை சேர்ந்த பிரான்சிஸ் ( 52) தோட்டத்தில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 40 லி சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 26, 2025

புதுக்கோட்டை: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18108087>>பாகம்-2<<>>)

News October 26, 2025

புதுக்கோட்டை: ரூ.2.10 லட்சம் மானியம் பெற தகுதிகள் (2/2)

image

▶️கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
▶️ ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
▶️ ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
▶️ விண்ணதாரர் 100 நாள் வேலை திட்டத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
▶️ இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க..

News October 26, 2025

புதுக்கோட்டை: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

image

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!