News October 12, 2025
நாமக்கல் அருகே கிணற்றில் மிதந்த சடலம்!

நாமக்கல், எர்ணாபுரத்தை சேர்ந்தவர் மாரப்பன். முன்னாள் பஞ்., தலைவர். இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 45 வயதுள்ள ஆண் சடலம் மிதந்தது. சம்பவ இடத்துக்கு நல்லிபாளையம் போலீசார் வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. இது கொலையா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 14, 2026
நாமக்கல் மக்களே கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 8 தாலுகா அலுவலகங்களில் இன்று காலை 10 முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் புதிய குடும்ப அட்டை கோருதல் போன்ற தேவைகளை மக்கள் நிவர்த்தி செய்யலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். தகுந்த ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகங்களை அணுகி பொதுமக்கள் பயன்பெறலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 14, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
News March 14, 2026
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.


