News October 12, 2025

சளி, இருமலை போக்க இந்த மூலிகை தேநீர்தான் பெஸ்ட்!

image

கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி டீ தூள் போட்டு கொதிக்க வையுங்கள். பின் கற்பூரவள்ளி இலைகளை சேருங்கள். அதில் தோல் நீக்கிய இஞ்சி (சிறு)துண்டுகள், மிளகு மற்றும் ஏலக்காயை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின் அதை வடிகட்டிக்கொள்ளவும். மிதமான சூட்டில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடியுங்கள். இது சளி, இருமலுக்கு சிறந்த நிவாரணமாகும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிரவும்.

Similar News

News March 3, 2026

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யாது ஏன்?

image

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ₹1,020 கோடி ஊழல் நடந்தது என்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதை எதிர்த்து, அதிமுகவின் இன்பதுரை தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 3, 2026

சற்றுமுன்: காய்கறிகள் விலை குறைந்தது

image

வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைந்துகொண்டே வருகிறது. மார்க்கெட் நிலவரப்படி, முருங்கைக்காய் ₹10 குறைந்து 1 கிலோ ₹50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கேரட், முள்ளங்கி, காலிஃபிளவர், மிளகாய் ஆகிய காய்கறிகளின் விலை கிலோவுக்கு ₹5 – ₹10 ரூபாய் வரை குறைந்து முறையே ₹20, ₹10, ₹12, ₹60 என விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News March 3, 2026

திமுக கூட்டணியில் காங்., நீடிக்குமா? இன்று இறுதி முடிவு

image

ராஜ்யசபா பதவி எல்லாம் தேவையில்லை 2016 -ல் தங்களுக்கு கொடுத்த 41 இடங்களை இந்த தேர்தலிலும் கொடுங்கள் என்று காங்., பேச்சுவார்த்தை குழு, திமுகவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லையாம். இதனால், திமுக கூட்டணியில் காங்., தொடருமா அல்லது விலகுமா என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில்,கே.சி.வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் இன்று சென்னை வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!