News October 12, 2025
கடலூர்: வடமாநில இளைஞர் பரிதாப பலி

புவனகிரி அருகே பு.உடையூர் பகுதியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளி மங்கள் பௌரி என்பவர், வயலில் நாட்டு நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மங்கள் பௌரியை எதிர்ப்பாராத விதமாக மின்னல் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து புவனகிரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Similar News
News March 11, 2026
கடலூரில் 1 மி.மீ மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று மார்ச் 11 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி புவனகிரி பகுதியில் 1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வேறு எந்த இடங்களிலும் மழை பதிவாகவில்லை.
News March 11, 2026
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <
News March 11, 2026
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <


