News October 12, 2025
National Roundup: டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி

*உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க ₹35,400 கோடி மதிப்பிலான வேளாண் திட்டங்களை PM மோடி தொடங்கி வைத்தார். *உத்தரகாண்டில் வினாத்தாள் கசிவால் 416 பணியிடங்களுக்கான அரசுத் தேர்வு ரத்து. *ராஜஸ்தானில் மங்கத் சிங் என்ற பாகிஸ்தான் உளவாளி கைது. *பிஹார் தேர்தலில் அசாசுதீன் ஓவைசியின் AIMIM கட்சி 100 இடங்களில் போட்டி என அறிவிப்பு. *டெல்லியில் 5 நாள்களுக்கு பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி.
Similar News
News October 12, 2025
சீன அதிபருடனான டிரம்பின் சந்திப்பு ரத்தாகிறதா?

சீனப் பொருள்களுக்கு 100% கூடுதல் வரி விதித்தது அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக சீனா விமர்சித்துள்ளது. USA-வின் இந்நடவடிக்கை சீனாவின் அரிதான உலோக ஏற்றுமதி கட்டுப்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கை என தெரிவித்துள்ளது. மேலும், இதனால் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நடக்கவுள்ள டிரம்பின் சந்திப்பு ரத்து செய்யப்படலாம் எனவும் மிரட்டியுள்ளது.
News October 12, 2025
ரவுடி நாகேந்திரன் உடல் முன்பு 2-வது மகன் திருமணம்

<<17955513>>ரவுடி நாகேந்திரன்<<>> உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A1 குற்றவாளியான நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி அக். 9-ம் தேதி இறந்தார். உடல் வியாசர்பாடியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, நாகேந்திரனின் உடல் முன்பு அவரது 2-வது மகன் அஜித் ராஜா கண்ணீர் மல்க திருமணம் செய்து கொண்டார்.
News October 12, 2025
கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: அமைச்சர்

தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கட்டண வசூலை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரித்தார்.