News October 12, 2025
புதுக்கோட்டை: முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்

கீரனூர் அருகே குளத்தூர் பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த பாலு என்பவரது மனைவி லட்சுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த மர்ம அசாமிகள் 5 பேர் வீட்டிற்குள் புகுந்து லட்சுமியைத் தாக்கி 15 பவுன் நகை மற்றும் ரூ.10,000 ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டுச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News October 26, 2025
புதுக்கோட்டை: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 26, 2025
புதுக்கோட்டை: தைலமரக்காட்டில் சடலமாக மீட்பு

அறந்தாங்கி அருகே சிட்டங்காட்டைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (48). எலக்ட்ரீசியன். இவர் நேற்று ஆலங்குடிக்கு கடலை ஏற்றி அரைப்பதற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளத்திவிடுதி கிராமத்தில் உள்ள தைல மரக்காட்டில் உள்ள மரத்தில் துண்டினால் தூக்கில் தொங்கிய நிலையில் வெங்கடாசலம் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News October 26, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை அழகு கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதற்கு 8-12ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.18-35 வயதும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளும் இருக்க வேண்டும். பயிற்சி காலம் 90 நாட்களாகும். பயிற்சியில் சேர்வதற்கு www.tnhdco.com இணையத்தில் பதிவுசெய்ய கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


