News October 12, 2025
திருவள்ளூர்: தொடரும் கஞ்சா விற்பனை:இருவர் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 10 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஐனுல் ஹக், மொயினுல் அலி ஆகியோரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் அடைத்தனர்.
Similar News
News March 13, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்தொடர்பான குறைதீர் முகாம் நாளை(மார்ச் 14) மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் இருந்தால் கலந்துகொண்டு பயனடையலாம். மேலும், வரும் 25ஆம் தேதிக்குள் கை விரல் ரேகையை பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
திருவள்ளூரில் இளைஞர் துடிதுடித்து பலி

பொதட்டூர்பேட்டை அடுத்த கோண சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவர்தனன், இவருடைய மகன் சரவணவேல்(17). இவர் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நண்பருடன் பைக்கில் செல்லும்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ மோதி பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொதட்டூர்பேட்டை போலீசார் நேற்று(மார்ச் 12) வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News March 13, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (மார்ச்.12) இரவு 10 மணி முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


