News October 11, 2025
கடன் தொல்லை நீங்க… சனிக்கிழமை இத செய்யுங்க

ஸ்ரீமகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடனிருந்து தீமைகளை அழித்தவர் சுதர்சனர் (எ) சக்கரத்தாழ்வார். வாழ்வில் ஒளிதரும் அவரது திருவருள் இருந்தால், கடன் இல்லாத வாழ்க்கை அமையுமாம். சனிக் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாத்தி, 12 முறை வலம் வந்து ‘ஸ்ரீசுதர்சன மஹா’ மந்திரம் பாடி மனமுருகி வேண்டினால் கடனால் உண்டான சங்கடம் நீங்கும் என்பது நம்பிக்கை.
Similar News
News March 13, 2026
தோனி செய்வது சரியல்ல: புஜாரா

ஐபிஎல் பீவர் தொடங்கியுள்ள நிலையில் தோனி பேட்டிங் குறித்து Ex கிரிக்கெட் வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். தோனியால் ஒரு போட்டியைத் தனி ஒரு ஆளாக வென்று கொடுக்க முடியும் என்று கூறியதுடன், 8 அல்லது 9-வது வீரராக அவர் பேட்டிங் செய்வது சரியல்ல என கூறியுள்ளார். வெறும் 5, 10 பந்துகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, 25 முதல் 30 பந்துகளை எதிர்கொள்வது அணிக்கு நல்லது எனவும் அவர் பேசியுள்ளார்.
News March 13, 2026
பல வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: CM ஸ்டாலின்

OBC அல்லாத கிரீமி லேயர் நிர்ணயத்தை தெளிவுபடுத்தும் SC-ன் தீர்ப்பை தான் வரவேற்பதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி இனி சம்பள வருமானத்தை கிரீமி லேயருக்கான வணிகம் அல்லது சொத்து வருமானத்துடன் சமப்படுத்த முடியாது; வேலைவாய்ப்புத் துறைகளில் விரோதமான பாகுபாட்டை இத்தீர்ப்பு நிராகரிக்கிறது என கூறியுள்ளார். பல வருட போராட்டத்திற்குப் பிறகு OBC நீதிக்கு கிடைத்த தீர்க்கமான வெற்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News March 13, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு பற்றி பயப்படாதீங்க: பிரேமலதா

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு பிரச்னையை திறம்பட கையாள முடியும் என PM மோடி கூறியதை சுட்டிக்காட்டிய அவர், மக்கள் தேவையின்றி பதட்டம் அடைய வேண்டாம் என தெரிவித்தார். அதுபோல, அனைவருக்கும் தட்டுப்பாடின்றி சிலிண்டர் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


