News October 11, 2025
BREAKING: முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வேலூரில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் சீனாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பலகட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டதை அடுத்து, வீரமணிக்கு சிறுநீரகத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. டாக்டர்கள் கண்காணிப்பில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ஆதரவாளர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு அதிகரிப்பு: EPS

குமரி, தென்காசி, நாகர்கோவில், சேலம், மயிலாடுதுறை பகுதிகளில் நேற்று நடைபெற்ற கொலை, வழிப்பறி சம்பவங்கள், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதாளத்திற்கு கொண்டு போய் உள்ளதை காட்டுவதாக EPS விமர்சித்துள்ளார். ஆனால், CM ஸ்டாலின் சுய விளம்பரத்தில் திளைப்பதாகவும் சாடியுள்ளார். எனவே, ஆட்சியில் இருக்கவுள்ள 4 மாதங்களிலாவது சட்ட ஒழுங்கின் மீது கவனம் செலுத்த வேண்டும் எனவும் EPS வலியுறுத்தியுள்ளார்.
News December 7, 2025
வசூல் வேட்டையில் மம்முட்டியின் ‘களம்காவல்’

ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி, விநாயகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘களம்காவல்’ திரைப்படம் டிச.5-ம் தேதி வெளியானது. மம்முட்டி மீண்டும் வில்லனாக நடித்துள்ள இந்த படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துல்கர் சல்மான் மற்றும் மம்முட்டி இணைந்து தயாரித்துள்ள இந்த படம், முதல் நாளிலேயே ₹15.7 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
News December 7, 2025
TN-ல் பெரியாரின் சமத்துவ தீபம் தான் எரியும்: CM

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக பிரிவினையை ஏற்படுத்த பாஜகவினர் நினைப்பதாக CM ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். மலிவான அரசியலை பாஜக செய்வதாக விமர்சித்த அவர், இந்த கூட்டம் குறித்து மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும் எனக்கூறினார். மதுரையில் பிரிவினையை ஏற்படுத்த முடியாது என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் எப்போதும் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம் தான் எரியும் என குறிப்பிட்டார்.


