News October 11, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

நாமக்கல், திருப்பதி வழியாக வாரந்திர ரயிலாக இயக்கப்பட்டு வரும் 16353/16354 நாகர்கோவில் – காச்சிகுடா (ஹைதராபாத்) – நாகர்கோவில் விரைவு ரயில் வரும் டிசம்பர்-13ம் தேதி முதல் நவீன LHB பெட்டிகளை கொண்டு இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நாமக்கல்லில் இருந்து காட்பாடி, திருப்பதி, கடப்பா, கூட்டி, கர்னூல், மஹபூப்நகர், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு சென்றுவர கூடுதல் இருக்கைகள் கிடைக்கும்.
Similar News
News December 8, 2025
நாமக்கல்: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 8, 2025
மோகனூர்: 7 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது!

மோகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியசாமி காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரின் வீட்டில் கட்டிலுக்குள் உள்ள லாக்கரில் வைத்திருந்த ரூ.5 லட்சம் மற்றும் 18 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இந்த வழக்கில் பொம்மம்பட்டி மாதேஸ் (35), விக்ரம்(25), சோலைராஜா(33), விஜய்(24). மவுலீஸ்குமார்(25) மற்றும் 17, 18 வயது டைய சிறுவர்கள் என 7 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
News December 8, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


