News October 11, 2025
50,000 பேரை வீட்டிற்கு அனுப்பும் IT நிறுவனங்கள்

TCS நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக கடந்த ஜூலையில் அறிவித்து ஊழியர்களை அதிர வைத்தது.. தற்போது பெரிய மற்றும் நடுத்தர IT நிறுவனங்கள், ஊழியர்களை ரிசைன் பண்ண சொல்லியும், உடனே வேறு வேலையை பார்க்க சொல்லியும் கமுக்கமாக வற்புறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 2025-26 நிதியாண்டில் 50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது உறுதி என கூறப்படுகிறது.
Similar News
News March 25, 2026
தி.மலையில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

தி.மலையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.
News March 25, 2026
புதுச்சேரியில் 5 தொகுதிகளில் திமுக – காங்., நேரடி போட்டி?

புதுச்சேரியில் தொகுதி உடன்படிக்கை ஏற்பட்ட நிலையிலும், 5 தொகுதிகளில் திமுக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து தொகுதிகளிலும் இரு கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், மங்கலம், திருபுவனை, நெல்லித்தோப்பு, ராஜ்பவன், காலாப்பட்டு தொகுதிகளில் காங்., வேட்பாளர்கள் வேட்புமனுவை வாபஸ் பெறாமல், வாக்கு சேகரிப்பில் இறங்கியதால் குழப்பம் எழுந்துள்ளது.
News March 25, 2026
ரேசன் கார்டுகளுக்கு… அரசு முக்கிய செய்தி

ரேஷன் கார்டு மற்றும் பட்டா, சிட்டா சேவைகளை பொதுமக்கள் மிக எளிதாக பெற, மாதந்தோறும் தாலுகா வாரியாக பொதுவிநியோக திட்ட குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் TN-ல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் இந்த குறைத்தீர்ப்பு முகாம்கள் நடைபெறாது என கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். எனவே தேர்தல் முடிவு வரும்வரை பொதுமக்கள் கலெக்டர் அலுவலகங்களுக்கு வீணாக அலைய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.


