News October 11, 2025

பெசன்ட் நகர் கடலில் மூழ்கி மாணவர் பலி

image

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் இன்று காலை 3 கல்லூரி மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர். கடல் அலையில் சிக்கி பிரகாஷ் (22) என்கிற மாணவன் உயிர் இழந்துள்ளார். கடல் அலையில் அடித்து சென்ற மாணவன் ரோகித் சந்திரணை போலிசார் தேடி வருகின்றனர். மேலும் ஒருவர் கார்த்திக் (24)சிகிச்சை பெற்று வருகிறார். பெசன்ட் நகர் போலிசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News March 24, 2026

சென்னையில் இப்படி ஒரு கோயிலா? கண்டிப்பா போங்க!

image

சென்னை அடையாறு அருகில் அமைந்துள்ளது மத்திய கைலாஷ் என்று அழைக்கப்படும் ஆனந்த விநாயகர் கோயில். இக்கோவிலில், “ஆத்யாந்த பிரபு” என்ற தனித்துவமான சிலை உள்ளது. இந்த சிலை வலதுபுறம் 50% விநாயகர் சிலையாகவும், 50% அனுமன் சிலையாகவும் உள்ளது. நவக்கிரக தோஷத்திலிருந்து விடுபட இங்கு பக்தர்கள் வழிபடுகிறார்கள். விநாயகர் மீது நேரடியாக கற்பூரம் ஏற்றி வைக்க இங்கு அனுமதிக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News March 24, 2026

சென்னை: ஆன்லைனில் பணம் அனுப்புறீங்களா?

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 24, 2026

பெரம்பூரில் விஜய் பிரச்சாரம்?

image

சட்டசபை தேர்தலில் த.வெ.க தனித்து களம் காண உள்ளது. 234 தொகுதிகளுக்கும் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை எனினும், அக்கட்சியின் தலைவர் விஜய், வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய், பெரம்பூர் தொகுதியில் நாளையே பிரசாரத்தையும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு பெரம்பூரில் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?

error: Content is protected !!