News October 11, 2025
தென்காசியில் கூட்டுறவு உதவியாளர்கள் பணிக்கான தேர்வு

தென்காசி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் காலியாக உள்ள உதவியாளர்கள் பணியிடத்திற்கான தேர்வு தென்காசி தனியார் பள்ளியில் இன்று (அக்11) எழுத்துத் தேர்வு நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் பார்வையிட்டார். தென்காசி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் துணைப்பதிவாளர்கள் கனகசுந்தரி, நரசிம்மன், கோபிநாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News October 11, 2025
தென்காசி: இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

தென்காசி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இன்று (11.10.25) தென்காசி மாவட்ட காவல் துறை மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இரவு காவல் துறை உதவி தேவைப்பட்டால் 100 அல்லது காவல்துறை கட்டுப்பாட்டு எண் 9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News October 11, 2025
தென்காசி: வேலை நாடும் இளைஞர்கள் கவனத்திற்கு

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற அக் 17ம் தேதி காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. 8th, டிகிரி மற்றும் ஐ.டி.ஐ டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்கள் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் <
News October 11, 2025
தென்காசி: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய அளவு மழையின் தாக்கம் இல்லாததினால் காரணமாக அருவியின் நகரம் என போற்றப்படும் குற்றால அருவிகளில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் அருவியில் நீர்வரத்து குறைந்து வருவதால் விடுமுறை தினமான சனிக்கிழமை குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து சென்ற வண்ணம் உள்ளனர்.