News October 11, 2025
ரயில்களில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை

தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்து சென்றால், 3 ஆண்டுகள் சிறை (அ) ₹1,000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. மேலும், விதிமீறல்களால் ஏற்படும் இழப்பு, சேதத்திற்கு சம்பந்தப்பட்டவரே பொறுப்பு. பயணிகள் சந்தேகத்துக்குரிய பொருள்களை கண்டால் 139 என்ற எண்ணிலோ (அ) RPF, TTE, ரயில் நிலைய அலுவலர்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 11, 2025
175 ரன்னில் அவுட்… ஜெய்ஸ்வால் சொன்னது என்ன?

வெ.இண்டீஸுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 175 ரன்னில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அதுபற்றி பேசிய அவர், இது ஆட்டத்தின் ஒரு பகுதியே. நான் எப்போதுமே நீண்ட இன்னிங்ஸ் ஆடி ஆட்டத்தை நீட்டிக்கவே விரும்புகிறேன் என்றார். பந்து நன்றாக வரும்போது நீண்ட நேரம் கிரீஸில் நின்று ரன்களை குவிக்க முடியும் என்ற அவர், இன்னும் பிட்ச் பேட்டிங்குக்கு தான் சாதகமாக உள்ளது. ஆனாலும், நம் பவுலர்கள் கலக்கலாக பந்துவீசுகின்றனர் என்றார்.
News October 11, 2025
மெட்டி ஒலியின் ரகசியம் தெரிந்துகொள்ளுங்கள்

*அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அணியும் மெட்டியை வெள்ளியில் அணிவதே சிறந்தது.
*மெட்டி உடைந்தால் உடனடியாக மாற்ற வேண்டும். உடைந்த மெட்டியை அணியக்கூடாது.
*மெட்டியை மங்களகரமான திருவிழா நாள்களில் மாற்றலாம்.
*மெட்டியை மாற்ற நினைத்தால், மதியம் 12 மணிக்கு முன்பாகவே மாற்ற வேண்டும்.
*ஜோதிடத்தின்படி 2 மெட்டி மட்டுமே அணிய வேண்டும். ஆனால், ஒற்றைப்படையாக 3 மெட்டிகளை பெண்கள் பெரும்பாலும் அணிகின்றனர்.
News October 11, 2025
பைக்கர்களை கார் வாங்க தூண்டும் மாருதி சுசூகி

பைக் வைத்திருப்பவர்களை கார் வாங்க தூண்டும் வகையில், மாருதி சுசூகி நிறுவனம் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் ஆரம்பநிலை கார்களான Alto மற்றும் S-Presso கார்களை, நடப்பு நிதியாண்டில் 2.50 லட்சம் யூனிட் வரை விற்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக பண்டிகை கால விலை குறைப்புகள் மற்றும் கார் வாங்க விரும்புவர்களுக்கு சிறப்பு நிதிச் சலுகைகள் வழங்கி, பைக்கர்களை ஊக்குவித்து வருகிறது.