News October 11, 2025
BREAKING: சிலியில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி வார்னிங்!

சிலி நாட்டின் கேப் ஹார்ன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. மேலும், தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகாவுக்கு இடைப்பட்ட பகுதியான டிரேக்கிலும் நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், பசிபிக் பெருங்கடல் எல்லைகளில் சிலி நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.
Similar News
News October 11, 2025
இதெல்லாம் டைனோசரை விட பழசாம்..

உலகின் பழமையான உயிரினமாக கருதப்படும் டைனோசர்கள், சுமார் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளன. ஆனால் சில உயிரினங்கள் டைனோசர்களுக்கு முன்பே தோன்றியுள்ளன. இதை விட ஆச்சரியம் என்னவென்றால், அந்த உயிரினங்கள், தற்போதும் பூமியில் வாழ்ந்து வருகின்றன. அவை எந்தெந்த உயிரினங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக பாருங்க. உங்களை ஆச்சரியப்படுத்திய உயிரினம் எது?
News October 11, 2025
BREAKING: கரூர் துயர வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு

கரூர் துயர வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி தவெக உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளில் அக்.13(திங்கள்) அன்று தீர்ப்பளிக்கப்படும் என SC அறிவித்துள்ளது. சிறப்புக் குழு விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் தவெக தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்குகளின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. விஜய்க்கு சாதகமான தீர்ப்பு வருமா?
News October 11, 2025
30 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, திண்டுக்கல், தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, தி.மலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருப்பூர், மதுரை, தேனி, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், சேலம், கரூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. கவனமா இருங்க ப்ரெண்ட்ஸ்!